தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கொம்பைச் சேர்ந்த சிலர் ராஜபாளையம் அருகே உள்ள செம்பட்டி ஐயனார் கோவிலுக்கு 2 லாரிகள் மற்றும் ஒரு காரில் வியாழன் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை பாலக்கொம்பையைச் சேர்ந்த காளிராஜ் (29) ஓட்டி வந்தார். இவர்கள் மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமியாபுரம் விலக்கில் வந்தது. அப்போது, எதிரே ராஜபாளையத்தில் இருந்து கோயமுத்தூருக்கு கழிவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக காரும் லாரியும் மோதின. இதில், பாலக்கொம்பை கென்னடி நகரைச் சேர்ந்த கருப்பையா (90) செல்வம் மகன் கணேசன் (12), கணேசன் மகள் நித்தியா (17) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.