புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸôர், அங்கு பணத்தை வைத்து சூதாடிய அரியாங்குப்பம் ஜான் வின்சென்ட் (55), கோரிமேடு நாகராஜ் (50), சண்முகாபுரம் சுப்பிரமணி (63), உருளையன்பேட்டை முத்துசாமி (42), மனோகர் (50), வேலன் (38), கருணாகரன் (41) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் முருகேசனும் கைது செய்யப்பட்டார்.