இத்தாலியில் மூழ்கிய கப்பலில், புதுச்சேரியைச் சேர்ந்த ராம்குமார் இருந்ததாகவும், அவர் தற்போது மீட்கப்பட்டு, இருப்பதாகவும், அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட உடமைகளை இழந்துள்ள நிலையில், அவர் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கப்பலில் மொத்தம் 130 இந்தியர்கள் இருந்தனர். அவர்களை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று, பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனிடம் தொடர்புகொண்டு தெரிவித்தேன். அவர் வெளியுறவுச் செயலர் மத்தாயிடம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து நத்தாய் எடுத்த நடவடிக்கையின் பேரில், இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட, ஊழியர்கள் மற்றும் பயணிகள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று, இந்தியர்களை சந்தித்து பேசியுள்ளனர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ராம்குமார் நலமாக இருப்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பாஸ்போர்ட் உள்ளிட்ட உடமைகளை இழந்துள்ளாதால், அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் நாராயணசாமி.