இதனால் இன்று காலை பெரும்பாலானவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்றனர். இதனிடையே ஊராட்சி மன்றத்தலைவருக்கு எதிரான சிலர், அவர்களிடம், 3 வாரக் கூலி மட்டும் வாங்கிவிட்டு ஏமாந்து விடாதீர்கள்; அடுத்து வேலையையும் கேட்டுச் செல்லுங்கள் என்று தூண்டி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் தங்களுக்கு கூலி வேண்டுமானால் பிறகு கொடுங்கள்; இப்போது தொடர்ந்து வேலையைக் கொடுங்கள் என்று கேட்டு, பணிகள் நடக்கும் ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர். ஆனால், ஊராட்சி மன்ற நிர்வாகிகளோ இன்றே கூலியை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனால் பெரும் குழப்ப நிலை நீடிக்கவே, பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி- சித்தூர் புறவழிச்சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் 250க்கும் மேற்பட்டோர் பெண்கள். அனைவரும் தங்கள் கைகளில் கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள் ஆகிய கருவிகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.