அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு மகளிர் காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோட்டம்

சேலம், ஜூலை 16 : சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 பெண்கள் நேற்று நள்ளிரவு காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். சேலம் அரசு மகளிர் காப்பகததில், இளம் வயது திருமணத்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:26 pm

தங்கராஜா

சேலம், ஜூலை 16 : சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 பெண்கள் நேற்று நள்ளிரவு காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சேலம் அரசு மகளிர் காப்பகததில், இளம் வயது திருமணத்தை நிறுத்தி மீட்கப்படும் பெண்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், விபச்சார வழக்கில் கைதாகும் பெண்கள் தங்கவைக்கப்படுவர்.

அந்த வகையில், கொல்கட்டாவைச் சேர்ந்த பிங்கி என்ற பெண்மணி கடந்த மே மாதம் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார். அதேப்போல, 2008 ஆம் பங்களாதேஷ் சேர்ந்த இளம் பெண்கள் பியா, சபீனா, ரேஷ்மா ஆகியோர் உரிய பாஸ்போர்ட், விசா இல்லாமல் பிடிபட்டு இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு காப்பகத்தின் சாவியை எடுத்து மறைத்து வைத்து கொண்ட இந்த நால்வரும், காப்பக கண்காணிப்பாளர் மல்லிகா, வார்டன் சாந்தா ஆகியோர் உறங்கிய பிறகு கதவை திறந்து, வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு காப்பகத்தில் இருந்து தப்பித்து விட்டனர்.

தப்பிச் சென்றவர்களில் மூவர் வெளிநாட்டுப் பெண்கள் என்பதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆணையர் கே.சி. மகாலி நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தப்பிச் சென்ற பெண்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.