இதனையடுத்து வந்த நபர் ஊர் தலைவர் கருப்பையா, இருளப்பன் மற்றும் கருப்பையா மகன் கணேசன் ஆகியோர் ஓரு பையில் 5 செல்போன்கள், ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கெட் பஜாரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். அங்கு கீழே நின்று கொண்டு செல்போனில் ஒரு பெண்ணிடம் வந்த நபர் பேசியுள்ளார். பின்னர் நீங்கள் மேலே வங்கியில் போய் இருங்கள் ஒருவர் வந்து உங்களைச் சந்தித்து வங்கிக் கணக்கு தொடங்க உதவி செய்வார் என்று கூறியுள்ளார். இதனை நம்பி மூவரும் வங்கியில் உட்கார்ந்திருந்துள்ளனர். கணேசன் தனது தந்தையிடம் ரெம்ப நேரமாகிவிட்டது. நான் போகிறேன் என்று கூறி வெளியே சென்று விட்டார். நேரமாகியும் யாரும் வராததால் கருப்பையாவும், இருளப்பனும் கீழே இறங்கி வந்துள்ளனர். இவர்களை அழைத்து வந்த நபர், இருளப்பனிடம் அஞ்சல் அனுப்ப பயன்படுத்தும் ஸ்டாம்பு வாங்கி வரச் சொல்லியுள்ளார். அவர் சென்றுவிட்டார். செல்போன்கள் இருந்த பையுடன் இருந்த கருப்பையாவிடம் நீங்கள் ரேஷன் கார்டை ஜெராக்ஸ் எடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். பையுடன் புறப்பட்ட அவரிடம், பையை நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி பையை கருப்பையா அவரிடம் ஒப்படைத்துவிட்டு ஜெராக்ஸ் எடுக்கச் சென்றுள்ளார்.