டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலை விபத்து- பைக் மீது லாரி மோதி விவசாயி மரணம்

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் பைக் மீது லாரி மோதியதில் செதில்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமதாஸ்(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
Updated On :5 நவம்பர் 2012, 10:35 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் பைக் மீது லாரி மோதியதில் செதில்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமதாஸ்(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கம் பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் மகன் ராமதாஸ். விவசாயியான இவர் கும்மிடிப்பூண்டிக்கு வேலை விஷயமாக வந்து வீட்டிற்கு திரும்பினார்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து வீட்டிற்கு செல்ல பெத்திக்குப்பம் மேம்பாலம் வழியே வந்த போது எதிரே வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் ராமதாஸின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.