பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரூர் அருகே கார் மோதி கூலித் தொழிலாளி பெண்கள் இருவர் பலி

கரூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி  பெண்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2012, 7:39 am

கண்ணன்

கரூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி  பெண்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூரை அடுத்த சின்னத்தாராபுரம் அருகில் நஞ்சைக்காளக்குறிச்சி என்ற இடத்தில் சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் விவசாயக் கூலித் தொழிலாளிகளான முத்து லட்சுமி (36), துளசியம்மாள் (52) ஆகியோர். அப்போது, தாராபுரத்தில் இருந்து வந்த கார் ஒன்று சாலையோரத்தில் அமர்ந்திருந்த அவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.