பின்னர் சார்பு ஆய்வாளர், அதிரபடிப்படை வீரர்களுடன் திருவண்ணாமலைக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள கருப்பசாமிகோயில் அருகே அருந்ததியர் ஜனநாயக முன்னணி மாநில பொதுச் செயலாளர் கௌதமன், அருந்ததிதியர் ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், டிரைவர் செந்தில்குமார், வேலு, பாண்டியராஜன் ஆகியோர் அதிரடிப்படை போலீஸார் மற்றும் சார்பு ஆய்வாளரை வழிமறித்துள்ளனர். எப்படி ஆட்களை ஏற்றிச் சென்ற லோடு வேனுக்கு பொய் வழக்கு போடலாம் என்று தரக்குறைவாக ஆபாசமாக பேசி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இவர்கள் கல்வீசியதில் விருதுநகர் ஆயுதப்படை 2-ம் பிரிவு காவலர் திருமுருகன் பலத்த காயம் அடைந்தார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.