புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கறவை மாடு கடன் கேட்டு விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை அருகே உள்ள தண்டரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்கக்கோரி, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

News image
Updated On :8 அக்டோபர் 2012, 12:00 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலை அருகே உள்ள தண்டரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்கக்கோரி, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தண்டரை கிராம தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கிளை சார்பில் இப் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏஜடியுசி மாவட்ட துணைத் தலைவர் கு.ஜோதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

வட்டச் செயலாளர் இரா.வீரபத்திரன், வட்டத் தலைவர் எஸ்.திருஞானம் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். 97 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன்தொகையை உடனே வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.