2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஆண்டாள் சூடிய மாலைகள் திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.20: ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் திருப்பதிப் பெருமானுக்கு சூட்டுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி பிரம்மோற்ஸவ நிகழ்ச்சியின் 5ம் நாள்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:31 am

கே.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.20: ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் திருப்பதிப் பெருமானுக்கு சூட்டுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி பிரம்மோற்ஸவ நிகழ்ச்சியின் 5ம் நாள் அன்று இந்த மாலை பெருமாளுக்கு சூட்டப்படும்.
கிளி, பரிவட்டம், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை ஆகியவற்றை அனுப்பி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அலுவலர் சாரா உறுப்பினர் பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் எஸ்.சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
இவை திருவீதி உலாவாகக் கொண்டுவரப்பட்டது. பின்னர் காரில் கோயில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ், கிச்சன் என்ற கிருஷ்ணன் ஆகியோர் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.