கோவை துடியலூரை அடுத்த பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வீராச்சாமி(46) என்பவர் கோவை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு பிரிவில் அதிகரியாக பணியாற்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் இவரை தொடர்பு கொண்ட நபர் தன் பெயர் சரவணக்குமார் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரி என்றும், நீங்கள் லஞ்சம் வாங்கி வீடு கட்டி வருவருவதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 லட்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.சந்தேகம் அடைந்த வீராசாமி கோவை மின்வாரிய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.அதற்கு அவர்கள் தங்கள் அலுவலுகத்தில் அப்படி யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
உஷாரான வீராச்சாமி சரவணக்குமாரை பிடிக்க முடிவு செய்து தான் பணத்தை தயார் செய்துவிட்டதாக சரவணக்குமாரிடம் கூறினார்.உடனே சரவணக்குமார் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு வீராச்சாமியை வரச்சொன்னார்.பின்னர் வீராச்சாமி பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சரவணக்குமாரை பிடித்தனர். விசாரணையில் சரவணக்குமார் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்தது தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

