தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் நிர்வாக வசதிக்காகவும், காவல்துறையின் பணியை செம்மைப்படுத்தவும் அவ்வபோது அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். தமிழக காவல்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.பி.கள் மொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதன் பின்னர் மொத்தமாக டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்படப்படாமல் இருந்தனர். சில டி.எஸ்.பி.கள் அவர்கள் விருப்பத்தின் பேரிலும், பணி ஒழுங்கீனத்தின் காரணமாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 50 டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
சென்னை தவிர மீதி அனைத்துப் பகுதிகளிலும் இந்த டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த டி.எஸ்.பி.கள் ஒரே பதவியில் பல ஆண்டுகளாக பணி புரிந்தவர்களாக இருப்பதாலும், விருப்பத்தின் அடிப்படையிலும், புகார் அடிப்படையிலும் மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கம்பம் - மல்லுக்கட்டும் திமுக, அதிமுக!

கொள்கையில்லாத கூட்டணிகள்

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

