/

பாகிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால்

Updated On :1 மார்ச் 2013, 11:22 pm

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மெஹ்மூத் ஜன் அப்ரிடி, "இன்டேக்ஹப்' நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தார். பத்திரிகைத் துறையில் 20 ஆண்டு அனுபவம் மிக்க இவர், வெள்ளிக்கிழமை மாலை, காலத் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது திட்டமிட்ட கொலை என்று காவல்துறை துணை ஆணையர் அகமது பஸாய் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மிரான்ஷா பகுதியில் மாலிக் முஸ்தாஸ் என்ற செய்தியாளர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவங்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.