ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்றப்பட்டது மத்திய அரசின் தோல்வி என திமுக கருத்துத் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் இன்று கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாற்றங்களைக் கொண்டு வர இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், இலங்கை அரசுக்கு எவ்வித கடினமான நெருக்குதலும் தர வலியுறுத்தாத இந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது, மத்திய அரசின் தோல்வியே என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








