பெங்களூர் யஸ்வந்தபுரம் காவல் சரகத்தில் ஆயுதங்களால் தலையில் தாக்கி கிறிஸ்துவ பாதிரியார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் யஸ்வந்தபுரம் பழைய மைசூர் லேம்ப் சாலையில் உள்ளது புனித செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கிறிஸ்துவ குருமடம். இந்த குரு மடத்தில் பாதிரியார் ஆவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் முதல்வராக இருந்தவர் தமிழ்நாடு ஊட்டியைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் (60). நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு குருமடத்தில் தங்கியிருந்த அவரை மர்மநபர்கள் தலையில் ஆயுதங்களாள் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த யஸ்வந்தபுரம் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மாநகர காவல்துறை ஆணையர் ஜோதிபிரகாஷ்மிர்ஜி, துணை ஆணையர் சித்தராமையா, பெங்களூர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் ஆகியோர் பார்வையிட்டனர். பாதிரியார் மறைவுக்கு கர்நாடக தமிழ் கத்தோலிக்க பொதுநல சங்கத்தின் தலைவர் புஷ்பராஜ், கர்நாடக கன்னட கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் ரெபெல்ராஜ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


