பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துணை காவல்துறை ஆய்வாளர், ஜலந்தர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறை துணை ஆய்வாளர் குர்தேவ் சிங், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதிப்பதற்காக காவல்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. அதனை பிடிக்க குர்தேவ் உள்ளிட்ட காவலர்கள் காரை துரத்திச் செல்லும் போது, காரில் இருந்த ஒருவன், துப்பாக்கியால் காவலர்களை நோக்கிச் சுட்டான். இதில் குர்தேவின் நெஞ்சில் குண்டடி பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்த காரில் 4 அல்லது 5 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


