காஞ்சிபுரம் மாவட்டம் ஈச்சந்தாங்கல் அருகே உள்ள கலக்காத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மனைவி இந்திரா. இவர் தனது மகன் சக்திவேலுக்கு வேலை வாங்கி தரும்படி,வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அருகே அகரம் கிராமத்தில் உள்ள கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் நாகேந்திரனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நாகேந்திரன் சக்திவேலுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்காக இந்திராவிடம் ரூ.5 லட்சம் பணமும் பெற்றதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்ற சில நாட்களிலேயே நாகேந்திரன் விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணை ஒன்றை கொடுத்ததாகவும், அதை சக்திவேல் விமான நிலைய அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது தான் அந்த ஆணை போலியானது என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்திரா, நாகேந்திரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு நாகேந்திரன் பணத்தை தருகிறேன் என கூறி பணத்தை திருப்பி கொடுக்காமல் தாமதித்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக இந்திரா வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனை சந்தித்து புகார் தெரிவித்தார். பின்னர் கலவை போலீசிலும் புகார் கொடுத்தார். அதன் பேரில் கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து போஸ்ட் மாஸ்டர் நாகேந்திரன் (எ) தனசேகரை கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


