இளம்பெண்ணுக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்து மோசடி செய்தது தொடர்பாக 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பெண்ணின் தாயார் எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகார் மனுவில்:-
என் மகளுக்கு 22 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை. பல இடங்களில் மாப்பிள்ளை தேடிவந்தும் பலனில்லை. இந்நிலையில் வேலூர் அடுத்த சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றம்) அவரது குடும்பத்தினருடன் பெண் கேட்டு மார்ச் மாதம் என் வீட்டுக்கு வந்தனர். மாப்பிள்ளை சுயதொழில் செய்து கைநிறைய சம்பாதிப்பதாகவும், அதனால் உங்கள் பெண் நல்லமுறையில் வாழ்வாள் என் கூறினர். மேலும் சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மகேசுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என்றார். இதனையடுத்மகேசுக்கும் திருமணம் நடந்தது.அன்று இரவு நடந்த முதரலிரவில் மகேஷ் திருநங்கை என்பது என் மகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சில நாட்கள் நரக வாழ்க்கை அனுபவித்த என் மகள் அவருடன் வாழ முடியாது என கூறி என் வீட்டுக்கே வந்து விட்டார்.
இதை தொடர்ந்து மகேஷ் மற்றும் அவரது அண்ணன்களிடம் நியாயம் கேட்டதற்கு அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே திருநங்கைக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க துணையாக இருந்த மகேஷ் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து திருமண செலவு தொகை ரூ.3 லட்சமும், சீர்வரிசைப் பொருட்களையும் மீட்டு தர நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.இது குறீத்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


