சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

200 பாமகவினர் கோவை சிறையில் அடைப்பு

விழுப்புத்தில் கைது செய்யப்பட்ட பாமக கட்சியினர் 200 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On :1 மே 2013, 7:15 pm IST

விழுப்புத்தில் கைது செய்யப்பட்ட பாமக கட்சியினர் 200 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள்கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் செவ்வாய்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யமுயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் 520 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களி்ல் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பலர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 200 பேர் கோவை மத்திய சிறைக்கு இன்று கொண்டுவரப்பட்டனர்.

கோவை மத்திய சிறையில் அவர்களுக்கென தனி விசாரணைக் கைதிகளுக்கான பிளாக் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.