வங்கதேச கட்டட விபத்தில் சிக்கி 17 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பெண் ரேஷ்மி தனது அனுபவத்தை கண்ணீர் மல்கக் கூறினார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 8 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டாயிருத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் இன்னமும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளை அகற்றும் போது, நேற்று ரேஷ்மி என்ற பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தவாறு, அவர் கடந்த 17 நாட்களை எவ்வாறு கழித்தார் என்பதை கண்ணீர் மல்கக் கூறினார்.
அதில், கட்டடம் இடிந்து விழும் போது, ஒரு மிகப்பெரிய தூண் அருகே நான் நின்றிருந்தேன். தூணுக்கும், மேல்தள பீமுக்கும் இடையே நான் மாட்டிக் கொண்டதால், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நான் சிக்கிக் கொண்ட இடத்தின் அருகில் இருந்த காய்ந்து போன உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன். அருகில் இருந்த தண்ணீரை குடித்து வந்தேன். கடைசி இரண்டு நாட்களாக உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லாமல் பட்டினிக் கிடந்தேன். தொடர்ந்து மீட்புக் குழுவினருக்கு சத்தம் எழுப்பி வந்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் எனது முயற்சி வீணாகி வந்தது.
கடைசியாக நேற்று தான் மீட்புக் குழுவினர் என்னை கவனித்தனர். நான் உயிர் பிழைப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. மறு ஜென்மம் எடுத்தது போன்று உணர்கிறேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


