/

ஷீரடி சாயிபாபா கோவிலில் வழிபட்டார் குடியரசுத் தலைவர்

இருநாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பிரணாப், சாயிபாபா கோவிலில் 15 நிமிடங்கள் வழிபட்டார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Updated On :1 ஜூன் 2013, 3:18 pm

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாயிபாபா கோவிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வழிபாடு நடத்தினார்.

இருநாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா சென்றுள்ளார் பிரணாப், சாயிபாபா கோவிலில் 15 நிமிடங்கள் வழிபட்டார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குடியரசுத் தலைவருக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருடன், மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன், பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் வி.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.