உத்தரப்பிரதேசத்தில், தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் உறவுக்காரப் பையனை கூலிப்படை வைத்து கொன்ற காவல்துறை ஆய்வாளர் தலைமறைவாகிவிட்டார்.
லக்னோவில், 14 வயதாகும் மாஸ் என்ற சிறுவன், கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டான். வேறு யாரையோ கொல்ல வந்தவர்கள் குறி தவறி சிறுவனை சுட்டுவிட்டதாக நினைத்த காவலர்கள், அவனை சுட்டவர்களை கைது செய்து விசாரித்ததில், காவல்துறை அதிகாரியாக இருக்கும் சஞ்சய் ராய் என்பவர், அச்சிறுவனை கொல்ல ரூ.2.5 லட்சம் வழங்கியதாகக் கூறினர்.
இதையடுத்து, சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறை பயிற்சிக்கு வந்த பெண் ஒருவர் மீது காவல்துறை ஆய்வாளர் ரவீந்தர் கௌர் காதல் கொண்டார். ஆனால் ரவீந்தர் கௌரின் காதலை, அப்பெண் ஏற்கவில்லை. இதனால், அவளது குடும்பத்தையே ஒழித்துக் கட்ட திட்டமிட்ட ரவீந்தர், அப்பெண்ணின் குடும்பத்துடன் நெருங்கி பழகி குடும்பத்தில் ஒருவராகியுள்ளார். பிறகு, அச்சிறுவனைக் கொல்ல கூலிப்படையை பயன்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தலைமறைவாகிவிட்ட ரவிந்தர் சிங், காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
தமிழக காவலர்களின் பாதுகாப்புக்கு பிற மாநில காவல்துறையை நாட வேண்டும்போல: பாஜக
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


