தில்லி மெட்ரோ ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழிலநுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இன்று காலை 9.45 மணியளவில், மெட்ரோ ரயில் ஒன்று தலைமைச் செயலகம் மற்றும் உத்யோக் பவன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நின்றது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன்பிறகு வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ரயிலுக்குள் ஏராளமான பயணிகள் எந்த தகவலும் இல்லாமல், பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.
2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அதில் பயணிக்கும் பயணிகள் பலரும் இன்று பாதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



