கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

ரோந்து பணிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்ம கும்பல்

வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 2-வது தெருவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர்

Updated On :11 ஜூன் 2013, 4:23 pm IST

வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் பாஸ்கரன். இவர் நேற்று இரவு ஊர்க்காவல் படை வீரர் பிரபாகரனுடன் ரோந்து பணியில் சென்றிருந்தார்.

வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 2-வது தெருவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களை அங்கிருந்து கலைந்து போக சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும், ஊர்க்காவல் படை வீரர் பிரபாகரன் ஆகிய இருவரையும் சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அங்கிருந்து ஓட்டம் பிடித்த பிரபாகரன் அருகில் இருந்த வியாசர்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவலை கூறினார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.