பல்வேறு தகவல்களை கூற மறுப்பதால், விக்ரம் அகர்வாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டூ தாரா சிங்குடனான தொடர்புகள் குறித்தும், பணி பரிமாற்றம் குறித்தும் விவரங்களைக் கூற மறுத்து வருகிறார்.
இதனால், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி உண்மையைக் கண்டறிய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
மேலும், மிகக் குறைந்த காலத்தில், விக்ரம் அகர்வால், அதிக சொத்துக்களை சேர்த்து பணக்காரராக மாறியுள்ளதால், சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









