/

தண்டவாளம் கடக்க முயன்ற முதியவர் இரயில் மோதி பலி.

வாணியம்பாடியில் தண்டவாளம் கடக்க முயன்ற முதியவர் மீது இரயில் மோதிய விபத்தில் பலியானார்.வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சையத்உசேன்(80). இவர் புதன்கிழமை மாலை

Updated On :1 ஆகஸ்ட் 2013, 4:47 pm

வாணியம்பாடியில் தண்டவாளம் கடக்க முயன்ற முதியவர் மீது இரயில் மோதிய விபத்தில் பலியானார்.

வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சையத்உசேன்(80). இவர் புதன்கிழமை மாலை வாணியம்பாடியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்லும் வழியில் பெருமாள்பேட்டை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து மங்களூர் நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் இரயில் தண்டவாளம் கடக்க முயன்ற சையத்உசேன் மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து இரயில்வே போலீôசர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.