அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் இருந்த இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உலகை உலுக்கிய சம்பவமாக அமைந்த இந்த நிகழ்வு, பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. இதில் கட்டடம் முழுமையாக இடிந்து தரை மட்டமானது; ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், அமெரிக்காவால் தேடப்படும் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலில் ஒசாமா பின் லேடனை வைத்ததுடன், அல் குவைதா பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையையும் எடுக்கத் தூண்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







