சிரிய அரசு ஆயுதங்களை ஒப்படைப்பதாக எடுத்துள்ள முடிவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சிரிய அதிபருக்கு எதிராக போராடிய மக்கள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்தன.
இதையடுத்து, தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்துவிட சிரிய அரசு ஒப்புக் கொண்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பராக் ஒபாமா, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க கால தாமதம் செய்தாலும் அந்நாடு ராணுவ நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








