வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சோனியா இன்று அதிகாலை இந்தியா திரும்பினார்

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 10:54 am IST

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார்.

தனது மகள் பிரியங்காவுடன் இன்று அதிகாலை சோனியா புது தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் நிலைக் குறைவு காரணமாக செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்க சென்றார் சோனியா. அங்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றபோது, சோனியாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.