சென்னையில் தலைமறைவாக இருந்த இரு ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு மாம்பலம் மூர்த்தித் தெருவைச் சேர்ந்தவர் மா. சேகர் என்ற ஆட்டோ சேகர் (45). மேற்கு மாம்பலம் புஷ்பவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சு. சிவா (39. இவர்கள் இருவர் மீதும் அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சேகர் மீது அசோக்நகர், கோட்டூர்புரம் காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதேபோல சிவா மீதும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரௌடிகள் கண்காணிக்கும் பிரிவு போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

ஜனநாயகன் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் பார்ப்பேன்! - அண்னாமலை பேச்சு!

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

