வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வேலூர் : திடீரென தீப்பற்றிய கார்; உயிர் தப்பிய குடும்பத்தினர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயர் தப்பினர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 1:04 pm IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயர் தப்பினர்.

ஓசூரைச் சேர்ந்த தனஞ்செயன், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

காரில் திடீரென புகை வருவதைப் பார்த்த தனஞ்செயன், உடனடியாக காரில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே குதித்தார். அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.