லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே சாமி கும்பிடச் சென்ற பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

விருதுநகர் அருகே சாமி வழிபாடு நிகழ்ச்சிக்கு சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Updated On :4 ஏப்ரல் 2013, 12:07 pm

விருதுநகர் அருகே சாமி வழிபாடு நிகழ்ச்சிக்கு சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(47). இவரது மனைவி மஞ்சு(24). இவர் புதன்கிழமை மாலையில் விருதுநகர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு வழிபாடு செய்யப் போவதாக கூறிச் சென்றாராம். ஆனால், இதுவரையில் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்ததில் மஞ்சு பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. எனவே இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீஸாரிடம் ஜெகதீசன் புகார் செய்தார். அதன் பேரி்ல் வழக்கு பதிவு செய்து காணமல் போனவர் குறித்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.