கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தருமபுரி- பேருந்தில் இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை: பட்டப்பகலில் அதிர்ச்சி

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :8 ஏப்ரல் 2013, 7:25 am

ரவி

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று முற்பகல் ஒரு இளம்பெண்ணும் இளைஞரும் மேட்டூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது. காரசார விவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் பலியானார். அவர் பென்னாகரத்தைச் சேர்ந்த சத்யா (22) என்று தெரியவந்தது. அந்த இளைஞர் மல்லாபுரத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், தப்பித்து ஓடிய அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.