சாத்தான்குளம் அருகே மினி பஸ்ஸைக் கடத்தியதாக 7 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டான்மடம் என்ற இடத்தில் மினி பஸ்ஸைக் கடத்தியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  தட்டான்மடம் என்ற பகுதிக்கு மினி பஸ் கடந்த 13ம் தேதி சென்றபோது, பயணி
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டான்மடம் என்ற இடத்தில் மினி பஸ்ஸைக் கடத்தியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  தட்டான்மடம் என்ற பகுதிக்கு மினி பஸ் கடந்த 13ம் தேதி சென்றபோது, பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், பஸ் ஓட்டுநர் தட்டான்மடம் பகுதியில் டீசல் போடச் சென்றுள்ளார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கத்தியைக் காட்டி மிரட்டி நடத்துனரிடம் இருந்து பணம் பறித்து, மினி பஸ்ஸையும் கடத்திச் சென்றது.

இதை அடுத்து மினி பஸ்ஸின் நடத்துனர் வெங்கடேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். இதன் பேரில்  காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் போலீஸார் குற்றவாளிகளைத் தேடினர். பின்னர், செக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com