மரக்காணம் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்தவர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்தத் தாக்குதலில் பாமகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.இது தவிர காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள்தான் காரணம்.இது தொடர்பாக முன்பே தகவல் தெரிந்தும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இந்த வன்முறைகள் தொடர்பாகவும், இதைக் காவல்துறை கையாண்ட விதம் தொடர்பாகவும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்தத் தவறும் செய்யாத பாமகவினர் 1050 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

