டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மரக்காணம் துப்பாக்கிச் சூடு: ராமதாஸ் கண்டனம்

மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்தவர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்தத் தாக்குதலில் பாமகவைச்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:28 am

அரவிந்தன்

மரக்காணம் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்தவர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்தத் தாக்குதலில் பாமகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.இது தவிர காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள்தான் காரணம்.இது தொடர்பாக முன்பே தகவல் தெரிந்தும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இந்த வன்முறைகள் தொடர்பாகவும், இதைக் காவல்துறை கையாண்ட விதம் தொடர்பாகவும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்தத் தவறும் செய்யாத பாமகவினர் 1050 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.