ஆனால், மரக்கட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செயின்ட் ஜான்ஸ் நிறுவன ஊழியர்களான தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த வில்சன் ராஜா மகன் விக்டர் மோகன் (39), லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோ பால் (49) ஆகியோர் ஆக்சிஸன் சிலின்டர் இல்லாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கூச்சலிட்டனராம். உடனே, கப்பலில் இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஆக்சிஸன் சிலின்டரை மாட்டிக் கொண்டு அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும், இருவரும் மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.