மனைவி கொடுத்த புகாரில் காவலர் மீது வழக்கு

கடலூர், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சஜிவ் (34). போலீஸ்காரர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அருணா என்ற அருணாதேவி (25) என்பவருக்கும், திருமணமாகி 7
Updated on
1 min read

மனைவியைக் கொடுமைப்படுத்தி, மானபங்கப்படுத்தியதாக போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சஜிவ் (34). போலீஸ்காரர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அருணா என்ற அருணாதேவி (25) என்பவருக்கும், திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், தனது கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னைக் கொடுமைப்படுத்தி வருவதாக சஜிவ் மீது, அருணாதேவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸார், வழக்குப் பதிந்து வழக்கு தொடர்பாக மும்தாஜ்பேகம் என்பவரை கைது செய்து, சஜிவ்வை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com