பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கடையம் - தெப்பக் குளத்திற்குள் வேன் கவிழ்ந்து விபத்து

தெப்பத்தின் சுற்றுப் பாதையையும் சுவரையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பக்தர்களும் பொது மக்களும் கோயில் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர். இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 23-01-13 அன்றுதான் குடமுழுக்கு நடந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

News image
Updated On :10 டிசம்பர் 2013, 6:10 pm

ஷேக் அப்துல்காதர்

கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோயில் தெப்பக் குளத்தில் வேன் கவிழ்ந்து விழுந்தது.

கடையம் ஊரின் மேற்கு பகுதியில் இராம நதி அணைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது நித்ய கல்யாணி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும். இது தமிழ் நாடு அரசு இந்து அற நிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் ஆகும். இந்தக் கோயிலில் கிழக்கு வாசல் பகுதியில் ஒரு அழகான தெப்பக்குளம் உள்ளது. இதில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு தெப்பக் குளத்தின் கீழ்பக்கச் சுற்றுப்பாதை இடிந்து விழுந்தது. இதனால் இந்த ஆண்டு ஆவணி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.

கடையம் வடபத்துக் குளத்தின் பாசனத்திற்குட்பட்ட வயலுக்கு கோயிலின் வடபுறமாக உள்ள பாதை வழியே கோயிலின் கிழக்குப் புறம் வந்துதான் செல்ல வேண்டும். செவ்வாய்க் கிழமை அந்த வழியாக கடையம் கேளையாப்பிள்ளையூரைச் சேர்ந்த முருகன் என்பவர் வேனை ஓட்டிச் கோயிலின் கீழ் பக்கம் உள்ள பாதையில் செல்லும் போது எதிர்பாராத விதமாக தெப்பக் குளத்தின் கீழ் பக்கச்சுவர் சரிந்து வேனும் தெப்பத்திற்குள் கவிழ்ந்தது. இதில் முருகன் அதிர்ஷட வசமாக உயிர் தப்பினார்.

தெப்பத்தின் சுற்றுப் பாதையையும் சுவரையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பக்தர்களும் பொது மக்களும் கோயில் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர். இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 23-01-13 அன்றுதான் குடமுழுக்கு நடந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.