மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் -- அச்சிறுப்பாக்கம் இடையே செல்லும் இரயில் தண்டவாளத்தில் திங்கட்கிழமை காலை 3 இடங்களில் ஏற்பட்ட விரிச்சலால் தென்னகத்திலிருந்து வந்த இரயில்கள் 2 மணி நேர காலதாமதமாக சென்னை நோக்கி வந்தன.
மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் -- அச்சிறுப்பாக்கம் இடையே செல்லும் இரயில் தண்டவாளத்தில் 2 இடங்களிலும், அச்சிறுப்பாக்கம் -- திண்டிவனம் செல்லும் வழியில் அறப்பேடு என்ற இடத்திலும் ஆக 3 இடங்களில் ஏற்பட்ட விரிச்சல் இருந்தது. வழக்கம் போல இரயில் தண்டவாளப்பகுதியை சரிபார்க்கும் ஊழியர்கள் இன்று காலை அந்த வழியாக வந்தபோது தண்டவாளத்தில விரிச்சல்கள் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்து மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் ஆகிய ரயில்நிலையங்களுக்கு தகவலை அளித்தனர்.
பின்னர் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு பிரிவினரும், தண்டவாளப்பகுதியை சரிபார்க்கும் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டு விரிச்சல் பகுதியை சரி செய்தனர். இதனால் சென்னை நோக்கி வநத அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் 2 மணி நேரம் காலதாமதமாக சென்னை நோக்கி வந்தன. தண்டவாளப்பகுதியை சரிபார்க்கும் ஊழியர்களின் விழிப்புணர்ச்சியால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

