விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் பெருமானூரை சேர்ந்த சின்னமுத்து மகன் சாமி(37), அண்ணாமலை மகன் பழனிச்சாமி(26), ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரை சேர்ந்த கருப்பணகவுண்டர் மகன் குப்புச்சாமி(34) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த பெட்டியில் ஏபிஈடி என்ற பெயர் பொறிக்கப்பட்ட கவரில் 532 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், சன்90 என்ற பெயர் பொறிக்கப்பட்ட கவரில் 9 ஜெலட்டின் குச்சிகள், போரஸ் பிரில்ஸ் என்ற வெள்ளை நிற பையில் 25கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டும், மூன்று மூட்டை மற்றும் மற்ற பைகளில் தலா 10 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டும் என மொத்தம் 85 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது.