எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தேவகோட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சி.கே.மங்களம் அருகே இருப்பது  ஓரிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி மகன் ஆரோக்கிய இளங்கோ(42). இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் தோல்பைகள் தயாரிக்கு நிறுவனம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காரைக்குடி

News image
Updated On :3 பிப்ரவரி 2013, 11:41 am

ARIVARASAN.J

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சி.கே.மங்களம் அருகே இருப்பது  ஓரிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி மகன் ஆரோக்கிய இளங்கோ(42). இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் தோல்பைகள் தயாரிக்கு நிறுவனம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காரைக்குடி வந்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் அங்கும் அதே தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இவருக்கும் அவருடைய மனைவிக்கும் கருத்துவேறுபாடு இருந்ததாகவும் தெரிகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பகல் நேரமாகியும் அவர் அரையிலிருந்து வெளிவராமல் இருந்ததால் விடுதியில் பணிபுரியும் பையன் அந்த அறையில் சென்று பார்த்தபோது சேலையில் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்னர். போலீசார் வந்து தூக்கிட்டவரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இறந்த இளங்கோவிற்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.