தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி
தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலியாயினர்.


தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலியாயினர்.
தருமபுரி கிருஷ்ணகிரி சாலையில் ஏரிங்கலூர் அருகே நேற்று இரவு பேருந்துக்காக சாலையில் நடந்து சென்றனர் மாலையன், ரமேஷ் ஆகியோர். மாலையன் (45) ஏரிங்கலூரைச் சேர்ந்தவர். இவர் தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது மைத்துனர் ரமேஷ்(27) அருகில் உள்ள கங்கணம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.
இருவரும் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், மாலையன் சம்பவ இடத்திலேயே பலியானார். ரமேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கே இன்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...