பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விருதுநகர் அருகே 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

விருதுநகர் அருகே ரேஷன் அரிசியை மொபட்டில் கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 10:35 am

கே.ஜெயக்குமார்

விருதுநகர் அருகே ரேஷன் அரிசியை மொபட்டில் கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 34 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அழகர்சாமி உத்தரவின் பேரில் போலீஸார் அருப்புக்கோட்டை-தூத்துக்குடி சாலையில் இன்று அதிகாலை ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மொபட்டில் வந்த ஒருவரை வழிமறித்து சோதித்தனர். அவர் 25 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் ரேஷன் அரிசியை வைத்திருந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கோவிலாங்குளத்தில் அவர் பதுக்கி வைத்திருந்த 33 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதனை வைத்திருந்த கோவிலாங்குளத்தைச் சேர்ந்த ராமசாமி (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.