கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முனுசாமி(37). இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை முனுசாமியின் மனைவி நீலாவதி அவரது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள அவரது தங்கையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் முனுசாமி தொழிற்சாலைக்கு இரவு பணிக்காக வீட்டை பூட்டி சென்றிக்கிறார்.இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிய முனுசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோ கதவும் திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ந்து பீரோவில் பார்த்ததில் பீரோவில் இருந்த 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 30 சவரன் நகைகள் திருடப்பட்டது அறிந்து இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,