அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. யில் போலீஸார் மீது தாக்குதல் நடைபெற்ற இடத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

கோட்டையூர் பகுதியில் ஒரு தகவலின் பேரில் போலீஸார் சென்று மதுபானம் அனுமதியின்றி விற்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கடந்த 1-ம் தேதி அங்கு சென்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விசாரிக்கு அன்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சார்பு

News image
Updated On :11 பிப்ரவரி 2013, 1:56 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 1-ம் தேதி இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸார் மீது தாக்குதல் நடைபெற்றதன் தொடர்ச்சியாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை 43 பேரை கைது செய்தனர். இதனையடுத்து இப் பகுதியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்து மதுரை சரக டி.ஐ.ஜி. பாலநாகதேவி திங்கள்கிழமை சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

கோட்டையூர் பகுதியில் ஒரு தகவலின் பேரில் போலீஸார் சென்று மதுபானம் அனுமதியின்றி விற்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கடந்த 1-ம் தேதி அங்கு சென்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விசாரிக்கு அன்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சார்பு ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர் போலீஸ் ஜூப்பில் கோட்டையூர் சென்றிருந்தனர். ஆனால் மணல் திருடும் கும்பல் மீது போலீஸார் இப் பகுதியில் கடும் நடவடிக்கைகள் எடு்த்திருந்ததன் விளைவாக, போலீஸாரை திட்டமிட்டு தாக்க தயாராக இருந்துள்ளனர். மின்தடை பட்ட நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு போலீஸ் ஜூப்பை தாக்கி, இன்ஸ்பெக்டரை பயங்கரமாக தாக்கினர். ஒரு கும்பல் சார்பு ஆய்வாளரை தூக்கிச் சென்று தாக்கியுள்ளது. மேலும் இரு போலீஸார் காயம் அடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தேடி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை போலீஸார் இச் சம்பவம் தொடர்பாக 43 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து இப் பகுதியில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய மதுரை சரக டிஐஜி பாலநாகதேவி திங்கள்கிழமை கோட்டையூர் வந்திருந்தார். அங்கு அவர் பொதுமக்களை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.