அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிப்.28-ல் சென்னையில் அஸ்வமேத யாகம்: தமிழ்நாடு கள் இயக்கம்

தமிழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்திலும், கோரிக்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கிலும், ஆளும் அரசு மற்றும் வாழும் மக்களின் கவனத்தை

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 7:49 am

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்திலும், கோரிக்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கிலும், ஆளும் அரசு மற்றும் வாழும் மக்களின் கவனத்தை இதன்பால் ஈர்க்கும் போக்கிலும், சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி அஸ்வமேத யாகம் நடத்த தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியதாவது:

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து புறப்படும் அஸ்வமேத யாகக் குதிரை, கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை வந்தடையும். தனிநபர் சத்தியாகிரக அடிப்படையில் ஒரு போராளி மட்டுமே இந்தக் குதிரையை நடத்திச் செல்வார். வந்திருக்கும் இதர போராளிகளும், ஆதரவாளர்களும், தலைவர்களும் வாழ்த்துரை வழங்குவோராகவே இருப்பர்.

ஆளும் அரசுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் சார்பில், குதிரையைத் தடுத்து நிறுத்துவோருக்கு வாதிடும் உரிமை வழங்கப்படும். இந்த வாத விவாதம், ஜனநாயக நெறிமுறைப்படி சென்னையில் உள்ள ஒரு அரங்கில் நடத்தப்படும். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு கருதி, பத்திரிக்கை மற்றும் ஊரடகங்கள் மட்டுமே பார்வையாளர்களாக இருந்து செய்தியினை மக்களுக்கு கொண்டு செல்வர். ஊடக நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதி இருக்கும்.

முற்கோள் (Thesis), முரண்கோள் (Anti-Thesis), முற்றுக்கோள் (Synthesis) என்ற வாத-விதாத அடிப்படையில் இந்த நிகழ்வு இருக்கும். நடைபெற உள்ள வாத-விவாதத்தில், தமிழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமே இல்லை என நிரூபித்து விட்டால், இயக்கம் கோரிக்கையை கைவிடும், கொண்டிருக்கும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும், போராட்டத்தை விலக்கிக் கொள்ளும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.