வன்னியம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர், வைத்தியலிங்காபுரம்-துலுக்கன்குளம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் பகுதியில் வைத்தியலிங்காபுரம், நாடார் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் (21), சின்ன முனியாண்டி மகன் பாண்டியராஜ் (22) ஆகியோர் குறிப்பிட்ட இரு சமுதாய அமைதியை சீர்குலைத்து, பொது சொத்துக்களை நாசப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக் கொண்டிருந்தார்களாம். இவர்களை முன் எச்சரிக்கையாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளா