பகல் 12.15 மணி முதலே ரயில் புறப்பாடு என்பது காரைக்காலில் இருக்கிறது. காலை குறிப்பாக அதிகாலை நேரத்தில் திருச்சி போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் புதிய ரயில்கள் வேண்டும் அல்லது நாகூரிலிருந்து புறப்படும் ரயிலை நீட்டிப்பு செய்யவேண்டும். பிற்பகல் 3.50 மணிக்கு தென் மாவட்டங்களை கடந்து செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயில் புறப்படுகிறது. இது நாகூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி போன்ற நிலையங்களில் கூடுதல் நேரம் தங்கிவிட்டு, மறுநாள் அதிகாலை எர்ணாகுளம் செல்கிறது. பயண நேரத்தைப்போன்று ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது. இதனால் காரைக்காலில் இது புறப்படும் நேரத்தை மாலை 4.50 மணி என மாற்றம் செய்யவேண்டும். இதன் மூலம் காரைக்காலில் மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பெரிதும் பயன்படுவர்.