டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருமணம் ஆக 8 நாளே இருந்த நிலையில் கிணற்றில் இளம்பெண்ணின் சடலம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த சுகன்யா(18) என்ற பெண்ணிற்கு திருமணம் ஆக எட்டே நாள் இருந்த நிலையில் வியாழக்கிழமை அவரது சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் கைப்பற்றப்பட்டது.

News image
Updated On :28 பிப்ரவரி 2013, 4:59 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த சுகன்யா(18) என்ற பெண்ணிற்கு திருமணம் ஆக எட்டே நாள் இருந்த நிலையில் வியாழக்கிழமை அவரது சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் கைப்பற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் சுகன்யாó. இவருக்கும் இவரது உறவினர் மகனுக்கும் வருகின்ற மார்ச்-8ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை பூச்செடியில் பூப்பறிக்க சென்ற சுகன்யா வீடு திரும்பாத நிலையில் அவரை பல இடங்களில் தேடிய நிலையில் அங்கிருந்த ஒரு கிணற்றில் பிணமாக இவர் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து பாதிரிவேடு போலீஸார் விரைந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

திருமணம் ஆக 8நாட்களே இருந்த நிலையில் சுகன்யா கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால், இவர் கிணற்றில் தவறி விழுந்தாரா, அல்லது திருமணம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து பாதிரிவேடு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.